மாறுவது எப்போது...?
(முகவைமுரசு வார இதழில் வெளிவந்த கவிதை - ஆகஸ்ட்-31 to செப்டம்பர்-6,2001)
உழைப்பு என்பதே தெரியாமல்
உறங்கி பொழுதை கழிக்கும்
முதலாளி வர்க்கம்...
ஓய்வு என்னவென்று தெரியாமல்
உடலை வருத்தி உழைக்கும்
உழைப்பாளி வர்க்கம்...
மகத்துவம் செய்யப்பட வேண்டிய
மதங்களையும்,ஜாதிகளையும்
வதம் செய்து வாழும்
வகுப்பு தலைவர்கள்...
உதிரம் குடித்தேனும்
ஓட்டுப்பெற்று ஒளிந்து கொண்ட
அரசியல் கூட்டம்...
அன்பு எனும் மருந்தை
அதிபாதாளத்தில் வீசிவிட்டு
அடிதடியை நாடும்
ஆக்ரோசமான களையர் கூட்டம்...
காதலின் புனிதம் அறியாமல்
கன்னியரை கலங்க வைக்கும்
"ஈவ்டீசிங்கை" கையில் எடுக்கும்
இளைஞர் கூட்டம்...
எந்த ஒரு செயலுக்கும்
எளிதாக லஞ்சம் கேட்க்கும்
எங்கள் அரசு ஊழியர்கள்...
இவர்கள் எல்லாம் மாறுவது எப்போது...?
நாம் மகத்துவம் பெறுவது எப்போது...?
No comments:
Post a Comment