Tuesday, July 28, 2015

வீரவணக்கம் மேதகு அப்துல்கலாம் அவர்களுக்கு..!!

வீரவணக்கம் மேதகு அப்துல்கலாம் அவர்களுக்கு..!!
===============================================

கடைகோடியின் மைந்தர் நீ
இந்தியாவின் காவியதலைவர் நீ


இரண்டு இருபதை இலக்காய் வைத்தாய்
எட்டி பிடிக்கும்முன் ஏன் மறைந்து போனாய்
விட்டுவிடும் தூரம்தான் - உன்
விழுதுகள் பார்த்து கொள்ளும் என்றா?


திருக்குறளை தேடலுக்கு வைத்து கொண்டாய்
தொன்மை தமிழனாய் அன்பில் வந்து நின்றாய்
கடைசிவரை இளைஞரை உசுப்பி விட்டாய்
கான கிடைக்காத பொக்கிசமாய் மாறிப்போனாய்...


அக்கினி சிறகுகளை படைத்தாய்
அத்தனை இளைஞர்களும் அதனோடு பறக்க‌
சிற‌குகள் உதிர்த்து போனாய்
சின்ன குஞ்சுகளுக்காய் சில காலம் இருந்திருக்கலாம்...!!


முகவைக்கு(இராமநாதபுரம்) முகவரியாக இருந்தவர் நீங்கள்
எங்கள் முகவரிக்கு முதல் வரியானவரும் நீங்கள்
தலைவனுக்கு இலக்கணம் தந்தவர் நீங்கள்
தாய்நாட்டிற்காய் முழுகணமும் உழைத்தவர் நீங்கள்..! 


இளம் பிஞ்சுகளையும் கனவு கான சொன்னீரே
இன்றுமுதல் எல்லோர் கனவிலும் இருப்பாயோ?
வானில் வருகிறது எத்தனையோ உன் படைப்பு - இனி எல்லோர்
வாழ்க்கையிலும் நிலை பெறும் உன் பிறப்பு...!!