நன்றி:எழுத்து இணையம்
பூச்சிகள்
புழுக்களின் வீடுகளை
புதைத்து
மூடிவிட்டு
புதியதோர்
அடுக்கு மாடிக்கு
பூமி
பூஜை செய்தோம்...
குருவி
காக்கை பறவையினத்தை
குறுக
செய்துவிட்டு
அகன்றஅலை
நுட்பத்தில்
அகிலத்தை
பார்த்தோம்...
கல்
என்று சொல்லி மலைகளையும்
கரி
என்று சொல்லி பூமியையும்
கண்டபடி
வெட்டி எடுத்து
காசும்
பார்த்து விட்டோம்...
மரபீணம்
எனச் சொல்லி
மண்ணை
கெடுத்தோம்
விஞ்ஞாணம்
எனச் சொல்லி
விண்ணை
கெடுத்தோம்...
துளையிட்டு
உறிஞ்சி
பூமியை
தள்ளிபோக செய்தோம்
புகைவிட்டு
நிரப்பி
ஓசோனில்
புள்ளி கோலம் வைத்தோம்
மழை
இல்லை நிழல் இல்லை என்று
மனம்
விட்டு திட்டி கொண்டோம்
எல்லாவற்றையும்
நாங்கள் செய்துவிட்டு
இந்த
இயற்கை சரியில்லை என்றோம்....!