Wednesday, July 27, 2011

காத்திருக்கும் தீர்ப்பு....!

காத்திருக்கும் தீர்ப்பு...                

              தமிழகத்தின் ஒவ்வொரு தமிழனும் வாதிடும் சூடான சமாச்சாரம் சமச்சீர் கல்வி. சமச்சீர் கல்வியைப் பற்றி பல்வேறு தரப்பினர் சார்பாகவும்,எதிராகவும் அலசி ஆராய்ந்த பிறகு அதனை பற்றி எழுதி கட்டுரையின் பாதையை மாற்ற விரும்பவில்லை, ஆனால் தமிழகத்தில் இன்றைய நிலையில் பாதிக்கப்படும் பல்வேறு பிரச்சனைகள் உள்ளன அவற்றை பற்றி விளக்குவதே கட்டுரையின் நோக்கம்.

 
1. சமச்சீர் கல்வி:
               இன்றைய சமச்சீர் கல்வி விசாரணையில் உச்சநீதி மன்ற நீதிபதி கேட்ட கேள்வி:
 "எப்போது சமச்சீர் கல்வி அமல்படுத்தப்படும்? காலக்கெடு ஏதாவது உள்ளதா? " 

தமிழக அரசு நீதிபதியின் பதில்:

"2012-ம் கல்வி ஆண்டில் சமச்சீர் கல்வியை அமல்படுத்த முயற்சி செய்யப்படும்"

                     ஆக 2012 லும் முயற்ச்சி செய்யப்படும் உறுதி கிடையாது. இவ்வளவு முட்டுக்கட்டை சமச்சீர் கல்விக்கு ஏன்? ஏன் இவ்வளவு பிடிவாதம் பிடிக்கிறீர்கள் இந்த விசயத்தில்.

எங்களுக்கு சில கேள்விகள் மனதில் எழுகின்றன.

* நீதிமன்றங்கள் சமச்சீர் கல்வியை அமல்படுத்த ஆணையிடுகின்றனவே அவை எதையும் ஆராயாமலா சொல்கிறார்கள்?. நீதிமன்றம் மாறுதல் செய்து கொள்ளலாம் என்று சொன்ன பிறகும் சரியில்லை... சரியில்லை... என்று பிடிவாதம் பிடிக்கும் நோக்கம் என்ன?

* இத்தனை பேர் சேர்ந்து(இந்திய தொழில் நுட்ப கழக பேராசிரியர்கள் உட்பட) உருவாக்கிய பாட திட்டம் தவறு என்றால் நீங்கள் உருவாக்கும் குழு மட்டும் எப்படி அறிவாளிகளாக இருந்து விட முடியும்?

* ஒரு புத்தகம் முழுக்க ஒரு சார்பாக இருக்க முடியாது , சார்பான பக்கங்களை ம‌ட்டும் வெட்டி எடுத்து விடுவதில் என்ன சிரமம் இருக்க போகிறது?

* நீங்கள் உருவாக்கும் குழு உங்கள் துதி பாடி சமச்சீர் புத்தகத்தை மாற்றவேண்டும் என்று எண்ணுகிறீர்களா ? இல்லை தனியார் பள்ளிகளை திருப்தி படுத்த வேண்டும் என்று நினைக்கிறீர்களா?(நீங்கள் உருவாகிய சமச்சீர் கல்வி ஆய்வு குழுவை ஆராயும் போது மேற்குறிப்பிட்ட இரண்டும் உண்மை போல்தான் தோன்றும்)

* இன்றைய நிலையில் மாணவர்களை இப்படி வதைப்பது தகுமா? இவர்கள்தான் அடுத்த தேர்தலில் ஓட்டு போடும் நிலைக்கு வருபவர்கள் அன்று இவற்றை நினைத்து பார்க்க மாட்டார்களா?.

* கடைசியாக எப்பொழுதுதான் சமச்சீர் கல்வியை அமுல்படுத்துவீர்கள்? . சமச்சீர் கல்வி வருமா? வராதா?

2. விலைவாசி உயர்வு:  



               கடந்த ஆட்சியில் விலைவாசி உயர்வு தலை விரித்தாடியது என்றுதான் ஆட்சி மாற்றம் விரும்பினோம்.அதன் படியே ஆட்சி மாறியது விலைவாசி குறைந்ததா? இல்லையே...
 
          மத்திய அரசு வாகன எரி பொருட்களுக்கு விலை உயர்த்தியபோது தமிழக அரசு வரியை குறைத்து மக்கள் மனதில் கொஞ்சம் சந்தோசத்தை தந்தீர்கள்,ஆனால் அடுத்த இரண்டு வாரங்களிலேயே அனைத்திலும் வரியை உயர்த்தி சாபத்தை வாங்கி கொண்டீர்களே இது என்ன சாமர்த்தியம்?

                  மத்திய அரசு விலை உயர்த்திய போது கூப்பாடு போடும் நீங்கள், இங்கு வரிகளை உயர்த்தி கொள்வது எந்த விதத்தில் நியாயம் ? இதற்க்கு மட்டும் எப்படி மற்ற மாநிலங்களை காரணம் சொல்கிறீர்கள்.அடித்தட்டு மக்கள் அன்றாடம் படும் அவலம் உங்களுக்கு தெரிய வில்லையா?விலை ஏற்றுவதற்க்குத்தான் உங்களை ஆட்சியில் அமர்த்தினோமா?.கடந்த ஆட்சியில் 1 ரூபாய்க்கு அரிசி தந்து மற்றவை விலை அதிகமாயிருந்தது , இப்பொழுது இலவசமாக அரிசி தந்திருக்கிறீர்கள் மற்றவை அப்படியேதான் இருக்கிறது அல்லது அதிகரித்திருக்கிறது அவ்வளவுதான் வித்தியாசம்.என்ன மாற்றம் கொண்டு வந்திருக்கிறீர்கள்,3 மாதத்திற்குள் எப்படி முடியும் என்று கேட்பவர்களுக்கு... 3 மாதத்திற்க்குள் பழைய அரசின் திட்டங்களை இவ்வளவு எதிர்க்க முனைந்த நேரங்களை இதில் கொஞ்சம் செலவிட்டிருக்கலாமே...

3. மின்சார பிரச்சனை:



சமீபத்தில் என் அலைபேசிக்கு வந்த குறுஞ்செய்தி:

 தமிழ்நாட்டில் மின்சாரம் தாக்கி இறந்தவர்கள் எண்ணிக்கை  

2007 - 86
2008 - 75
2009  - 15
2010 - 5
2011 - ௦௦௦௦௦0

  - ‍‍கொய்யால மின்சாரம் இருந்தாதானடா சாவீங்க... 
                                 இது நகைச்சுவைக்காக அனுப்படிருந்தாலும் அதில் உள்ள செய்தியை நம்மால் மறுக்க இயலாது.சமீபகாலமாக எப்பொழுது மின்சாரம் போகிறது எப்பொழுது மின்சாரம் வருகிறது என்றே தெரியவில்லை.கடந்த ஆட்சியிலாவது அறிவித்து விட்டு மிசாரத்தை தடை செய்வார்கள் ஆனால் இப்பொழுதெல்லாம் எப்பொழுது மின்சாரம் தடைசெய்வார்கள் எவ்வளவு நேரம் மின்சாரம் போகும் என்பதே தெரியவில்லை.(தூக்கம் கெட்டு கண்விழித்த போது யோசித்தவைதான் இவையெல்லாம்). மின்சார உற்பத்திக்காக சில நடவடிக்கைகளில் அரசு இறங்கியிருப்பதை பாராட்டலாம் அனால் அவர்கள் செய்த அதே தவற்றை செய்வதன் மூலம் வெறுப்பை சம்பாதிக்கிறீர்கள் என்பதை மறந்து விடாதீர்கள். 


4. பேருந்து கட்டணம் மற்றும் அரசு மதுபான வியாபாரம்:





                  போன ஆட்சியில் கலர் கலராய் பேருந்து இயக்கி மக்களை வாட்டி வதைக்கிறார்கள் என்று கூறித்தான் ஓட்டு கேட்டு வந்தீர்கள்.நீங்கள் அதையே பின்பற்றுவது என்ன நியாயம் ? மக்கள் எப்படி போனாலும் பரவயில்லை வருமானம் வந்தால் போதுமா?.போன ஆட்சியில் காது கிழிய கத்திய கூட்டனி கட்சிகள் எங்கே? என்ன செய்கிறார்கள் எதிர்கட்சியினர்?.சொகுசு பேருந்து என்ற பெயரில் ஏன் இவ்வளவு கட்டணகொள்ளை. சாதரன பேருந்துகளுக்கும் சொகுசு பேருந்துகளுக்கும் இடையே என்ன வித்தியாசம் வைத்திருக்கிறீர்கள் (தானியங்கி கதவு தவிற).எதற்க்காக போக்குவரத்து மிகுந்த காலை,மாலை நேரங்களில் சொகுசு பேருந்து மட்டுமே இயக்குகிறீர்கள். குறைந்த பட்சம் சாதரன பெருந்துகளை மட்டும் அதிகரிப்பதற்க்கும் ,வேலை நேரங்களில் சொகுசு பேருந்துகளை மட்டும் இயக்கும் பழக்கத்தினை மாற்றி சாதாரன பேருந்துகளையும் இயக்க ஆவன செய்யுமா இந்த‌ அரசு?.

                          நீங்கள் உருவாக்கிய வருமான கூடம் அரசு மதுபான வியாபாரம், நன்றாக பயன்படுத்தியவர்கள் போன ஆட்சியாளர்கள். ஆனால் அதில் வேலை செய்யும் படித்த இளைஞர் கூட்டம் என்ன பாவம் செய்தார்கள்,அவர்களின் பணி என்று நிரந்தரம் செய்யப்படும்,இதை நம்பி வேறு வேலையில்லாமல் இருக்கும் அவர்களுக்கு என்ன செய்தி சொல்லபோகிறீர்கள்?

5. ஈழம் மற்றும் கச்சதீவு பிரச்சனைகள்:


                  இந்த இரண்டு விசயத்திலும் நீங்கள் எடுத்த முடிவுகளை மனதார பாராட்டுகிறோம் அதே நேரத்தில் இத்தோடு நின்று விடாமல் மெலும் பல அழுத்தங்களை சர்வதேச நாடுகளுக்கும், மத்திய அரசுக்கும் கொடுக்க வேண்டுகிறோம். கச்ச தீவை பெறவேண்டும் என்ற தீர்மானத்தில் இருந்து ஒரு போதும் பின்வாங்காதீர்கள்
                      இலங்கை பொருள்களுக்கு தடை விதித்துள்ளது உண்மையில் அமலில் உள்ளதா? எனக்கு தெரிந்த சில இடங்களில் இலங்கை தயாரிப்புகள் விற்பனை செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். உதாரணமாக இந்திய தொழில்நுட்ப கழக வளாகம்(ஐ.ஐ.டி) போன்றவற்றில் தாராளமாக இலங்கை தயாரிப்புகள் கிடைக்கின்றன. எனக்கு தெரிந்த நண்பர்களிடமும் எடுத்து கூறி அவற்றை வாங்காமல் தவிர்க்கிறோம் மற்றவர்களை எப்படி தடுப்பது?. எப்படி இவற்றை கண்காணிக்க போகிறீர்கள், பெயரளவில் மட்டும் தீர்மானம் கொண்டு வருவது தேவை இல்லாதது அவற்றை எப்படி செயல் படுத்த போகிறோம்.


6. போக்குவரத்து நெரிசல்:

                         சென்னையின் இருக்கும் பெரிய பிரச்சனை போக்குவரத்து பிரச்சனை. நடந்து போய்விடலாம் என்று என்னும் அளவுக்கு போக்குவரத்து நெரிசல் இருக்கிறது. மெட்ரோ ரயில் திட்டம் முடிவடைந்தால் இதற்க்கான பிரச்சனை ஓரளவு முடியும் என நினைத்திருந்த மக்களின் நம்பிக்கையில் ஒரு கல் எறிந்து விட்டீர்கள். மெட்ரோ ரயிலுக்கு பதிலாக மோனொ ரயில் இயக்கப்படும் என்று அறிவித்திருக்கிறீர்கள். அந்த திட்டம் எவ்வளவு காலம் இழுக்கும் இன்னும் எவ்வளவு காலங்கள் நாங்கள் இந்த போக்குவரத்து பிரச்சனையை சமாளிப்பது. இந்த மெட்ரோ ரயில் திட்டத்தை என்ன செய்ய போகிறீர்கள்? அந்த திட்டம் முடிந்து அதற்கான தடுப்புகளை என்று எடுபீர்களோ அன்றுதான் கொஞ்சமாவது போக்குவரத்து பிரச்சனைக்கு தீர்வுகாண‌ முடியும். இந்த திட்டங்களுக்கு ஒரு தீர்வு காண முன்வருமா அரசு? 

7. நில அபகரிப்பு பிரச்சனை :

                  இது கண்டிப்பாக வரவேற்க பட வேண்டிய ஒன்று.ஆனால் இதிலும் சில திருத்தங்கள் வேண்டும் பலிவாங்கும் நோக்கோடு ஒரு சாராரை மட்டும் கைது செய்வது தவிர்க்க படவேண்டும். தவறு யார் செய்திருந்தாலும் அது ஆளுங்கட்சி, முன்னால் ஆண்ட கட்சி என்ற பேதமின்றி நடவடிக்கைகள் வேண்டும். நிறைய அரசியல்வாதிகள் தான் ஒரு கட்சி, தன் மகன் ஒரு கட்சி, தன் மைத்துனர் ஒரு கட்சி என குடும்பங்கள் அனைத்தும் அனைத்து கட்சிகளிடமும் தொடர்புகளை வைத்துள்ளனர். இவர்கள் செய்யும் ஏமாற்று வேலைகளையும் கண்டு பிடித்து கட்சி பாகுபாடின்றி செயல் படவேண்டும். ஏழை மக்களின் ரத்தங்களை உறிஞ்சியவர்களை சட்டதின் முன் சரியான தண்டனை பெற்று கொடுக்க வேண்டும். அதே நேரத்தில் இதை சாதகமாக பயன்படுத்திகொண்டு பலிவாங்கும் நோக்கோடு செயல்படும் நபர்கள் மீதும் கடுமையான நடவடிக்கைகள் வேண்டும், இல்லையென்றால் இந்த நடவடிக்கைகள் பலிவாங்கும் நடவடிக்கையாகவே மாறிப்போகும்.      
                                  
                         இவ்வளவு முக்கிய பிரச்சனைகளையும் இன்னும் பல பிரச்சனைகளையும் ஆராய்ந்து மக்களை முன்வைத்து தீர்த்து வைத்தால் தான் நம்பிக்கையுடன் ஓட்டு போட்ட மக்களுக்கு இந்த அரசின் மீது நம்பிக்கை வரும். முந்தைய அரசு செயல்படுத்தியது என்ற ஒன்றிற்காக எல்லா திட்டங்களையும் குழிதோண்டி புதைக்க நினைத்தாலோ, மக்கள் துன்பம் அனுபவிக்கும் செயல்களில் இறங்கினாலோ பாதிப்பு உங்களுக்குதான் ஏனென்றால் மக்கள் இப்பொழுது புத்திசாலிகள் எல்லாவற்றையும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். என்ன ஒன்று அவர்கள் அடுத்த தீர்ப்பு சொல்வதற்க்கு நான்கு வருடங்கள் ஆகும்.

Wednesday, July 6, 2011

பணம் பறிக்கும் இந்திய ஏழைகள்

               இந்திய தொலைத்தொடர்பு துறையின் வளர்ச்சி உலகத்திலேயே மிகப்பெரிய ஆச்சர்யத்தையும் அறிவியல் துறையின் நம்பிக்கையையும் ஏற்படுத்தி இருக்கிறது அதே சமயம் அந்த தொலைத்தொடர்பு துறையின் வளர்ச்சி எந்த அளவு பாமர மக்களை வளர்சிப்பாதைக்கு அழைத்து செல்கின்றது என்பதும் முக்கியம். அவை வளர்ச்சியைத்தான் ஏற்படுத்தி இருக்கின்றதா? இல்லை பாதிப்புகளை உண்டாக்கி இருக்கின்றதா?

வளர்ச்சி யாருக்கு..? பாதிப்பு யாருக்கு..?

        தொலைத் தொடர்புதுறை தொழிலில் லாபம் அடையாத நிறுவனங்களே கிடையாது அந்த‌ அளவுக்கு அவர்களின் வியாபார யுக்திகளும் , கவர்ச்சி அறிவிப்புகளையும் நாளுக்கு ஒன்றாய் அறிவித்து மக்களை முட்டாளாக்குதிலும் முன்னனியில் திகழ்கின்றனர். அந்த அறிவிப்பிலும், கவர்ச்சியிலும் மயங்கி எழ முடியாமல் திக்கி தவிப்பது மக்கள்தான். மக்களை இரு வகைகளாக பிரித்துக் கொள்ளலாம் ஒருசாரார் நன்கு சம்பாதித்து பொழுது போக்காய் செலவு செய்யும் மக்கள், அவர்களுக்கு இந்த பிரச்சனை ஒரு பொருட்டே கிடையாது, தெரியாமல் சாலையின் எல்லைக் கோட்டை தாண்டி வண்டியை நிறுத்தி விட்டு போக்குவரத்து காவல்துறையிடம் 100 அல்லது 200 ஐ கொடுத்து விட்டு சென்று கொண்டிருக்கும் மக்கள் அவர்கள்(எதிர் கேள்வி எதுவும் கேட்கமாட்டார்கள்). தேவைக்கும் அவசரத்திற்க்காகவும் மட்டுமே பார்த்து பார்த்து செலவு செய்யும் ஒரு சாரார்,அதே காவல்துறையிடம் மாட்டிக் கொண்ட பின்னும் கெஞ்சி ,மண்ணிப்பு கேட்டு எந்த அளவுக்கு குறைக்க முடியுமோ அந்த அளவுக்கு குறைத்து பணம் கொடுத்து மனசு நோகும் ஒரு சாரார்.

        இந்த இரண்டாம் வகையினர்களை பற்றி கண்டிப்பாக பேசியாக வேண்டும்.சமீபத்தில் ஊருக்கு சென்றிருந்தேன் ஒரு உறவின் முறை (அவர் ஒரு கூலி தொழிலாழி) தனது அலைபேசியை எடுத்துகொண்டு என்னிடம் வந்தார்.

             "அப்பு நல்லா இருக்குறீங்களா? என்னானு தெரியல நான் எப்போ காசு போட்டாலும் எடுத்துகிறானுக என்னானு பாருங்கப்பு.."
 

                      என்று தனது அலைபேசியை கொடுத்தார்.அவர் அதை வைத்திருப்பதிற்க்கு காரணம் தனது மகள் வெளியூரில் படிக்கிறார் அவருடனான தொடர்புக்காக மட்டுமே அதை வைத்திருக்கிறார். நான் பார்த்தில் அவருக்கு தின ராசி பலன்(daily horoscope) மற்றும் மட்டை பந்து  சேவை(cricket update) என்ற இரண்டு சேவைகள் செயல்படுத்தப் பட்டிருந்தது. நான் வாடிக்கையாளர் செவை மையத்திற்க்கு பேசி அந்த செவைகளை நிறுத்தச் சொல்லி அவரிடம் அலைபேசியை கொடுத்து விட்டு வந்தேன்.

        இப்பொழுது சொல்லுங்கள் நம்மையும் அறியாமல் நம்மிடம் பணம் பறிப்பவர்களுக்கு என்ன பெயர்?. பல சமயம் அவர்கள் அனுப்பும் குறுஞ்செய்தியை படித்தாலே சில சேவைகள் செயல்பட்டு விடுகின்றது. ஒன்றும் தெரியாதவர்கள் என்ன செய்வது பணத்தை இழந்து நிற்பதுதான் மிச்சம். நுகர்வோர் மையத்தையோ நீதிமன்றத்தையோ அனுகலாமே என்று கூறும் அறிவு ஜீவிகளே இன்றைய சூழலில் நன்கு படித்து எல்லாம் தெரிந்தவர்களே நீதிமன்றம் , நுகர்வோர் மையம் என்று அழைவதற்க்கு முடியாமல் எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு செல்லும் போது பாமர மக்கள், ஏழைகள் என்ன செய்து விட முடியும்.

        அவர்களை தொடர்பு கொள்ளும் முன் இந்த பொத்தானை அழுத்து அந்த எண்ணை அழுத்து என்று படாத பாடு படுத்தி விடுவார்கள்,அதற்க்குள் நமது பொறுமை எல்லாம் கரைந்து விடும்.அப்படி தொடர்பு கொண்ட பின்னும் அவர்கள் நம்மை காக்க வைக்கும் நேரம் இருக்கிறதே அதை சொல்லி மாளாது.... 

           அலைபேசி வாடிக்கையாளர் மையம் எதற்க்கு என்று தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.எத்தனை பிரச்சனைகளை அவர்கள் தீர்த்து வைத்திருப்பார்கள்? உண்மையாகவே இவர்களுக்கு இருக்கும் பிரச்சனை தெரியாதா? தெரிந்தும் ஏன் மறைக்கிறார்கள்? அவர்கள் சொல்வதை சொல்லும் கிளிப்பிள்ளை போல் 

"வணக்கம் தங்களுக்கு என்ன பிரச்சனை தெரிந்து கொள்ளாமா?" 
"காத்திருந்தமைக்கு நன்றி"
"விரைவில் சரி பார்க்கிறோம் சேவை மையத்தை அனுகியதற்க்கு நன்றி". 

இவைதான் பெரும்பாலும் கேட்க கூடிய பதில்.இதை சொல்வதற்க்கு எதற்க்கு அவர்கள்.இந்த லட்சனத்தில் அதை பதிவு வேறு செய்து கொள்கிறார்கள்.பதிவு செய்வதை ஒரு முறையாவது கேட்டிருப்பார்களா அதன் மேளாளர்கள்? பின்பு அப்படி இத்தனை பிரச்சனைகள். யாராவது சொல்லுங்கள் நீங்கள் வாங்கியதில் இருந்து உங்கள் அலைபேசி சேவையில் எந்த ஒரு பிரச்சனையும் இருந்ததில்லையா?.

        குறைந்த பட்சம் ஒவ்வொரு நிறுவனமும் 10 கோடி வாடிக்கையாளர்கள் வைத்திருக்கும்.ஒவ்வொருத்தருக்கும் குறைந்த பட்சம் 1 ரூபாய் மோசடி செய்வதாக கணக்கிட்டால் கூட‌ 10 கோடி ரூபாய் கொள்ளை அடித்திருக்கிறார்கள்,இவை குறைந்த பட்சம் அதிகபட்சம் எவ்வளவோ யாருக்கும் தெரியாது.இந்த நிறுவன தலைவர்கள்தான் அலைக்கற்றை ஒதுக்கீட்டிலும் தங்களது வேலைகளை காட்டி பல கோடிகளை சுருட்டி இருக்கிறார்கள் ஆக நாட்டையும்,நாட்டு மக்களையும் சுரண்டி கொலுத்து பெருகும் இவர்கள் பணக்காரர்கள்... ஆனால் இந்தியா ஏழைகள் நிறைந்த‌ நாடு.

        குறைந்த பட்ச சமுதாய நோக்கம் கூட இல்லாமல் அப்படி சம்பாதித்து என்ன செய்ய போகிறார்கள் இவர்கள்?. இப்பொழுதே பல பறவைகளை (எ.கா:சிட்டுகுருவி,செண்பகம் மற்றும் குயில்) காண முடிவதில்லை, பலருக்கு கதிர்வீச்சு பாதிப்பு கொஞ்சம் கொஞ்சமாக பரவுகின்றது. எல்லாம் அலைபேசி கோபுரங்களின் அன்பளிப்பு. இவற்றையெல்லாம் முறைபடுத்தி சில இடங்களில் மட்டும் வைக்கலாமே ஏன் கண்ட இடங்களில் வைத்து பாதுகாப்பற்ற ஒரு சூழ்நிலையை உருவாக்குகிறார்கள். இயற்க்கையை ஏன் உதாசீன படுத்துகிறார்கள். சேவை கட்டணம் என்ற பெயரில் பணம் வசூலிப்பது போதாமல் ஏன் மக்களின் வயிற்றெரிச்சலை கொட்டிக்கொள்கிறார்கள். இந்த பணக்கார‌ ஏழைகள் எவ்வளவு நன்மைகள் இந்தியாவிற்காக செய்திருக்கிறார்கள்?

                    தொலைதொடர்பு துறையில் நன்மைகளே இல்லையா என்று கேட்க வேண்டாம். தீமைகளை களைய வேண்டும் என்பதே எண்ணம்.


        தனியார் மயம் என்ற போர்வைக்குள் என்று இந்தியா புகுந்ததோ அன்றிலிருந்தே போர்வைக்குள் நடக்கும் மர்மங்களும், கொள்ளைகளும் வெளித்தெரியாமலே போய்க்கொண்டிருக்கிறது. இந்த தனியார்மய வாதிகள் கடைசியில் பிடுங்குவது மக்களின் பணம். (இவர்கள்தான் இந்தியவின் பெரும்பணக்காரர்கள் ஆனால் இவர்கள் பிச்சைகாரர்கள், திருடர்களை விட கேவல
ம்). இந்த இந்தியாவின் நோய்களை, ஊழல் பெருச்சாலிகளை எப்படி புறக்கணிக்க போகிறோம்..? அரசியலுக்கு அப்பாற்பட்டு இந்தியாவின் நன்மைக்கு உட்பட்டு... யோசிப்போமா..?