Monday, January 26, 2009

இனியும் வேண்டாம்...

(குஜராத் பூகம்பத்திற்க்கு நினைவு அஞ்சலி)
(பரமக்குடி முகவைமுரசு வார இதழில் வெளிவந்த கவிதை - ஜனவரி 25 to 31,2002)

குடியரசு தினத்தில்
குதூகலம் கொண்ட மனங்களில்
கோரமான சோகம்...

கட்டிடங்கள் சிறு
கற்களான கொடுமை...
கொடியேற்றிய சிறார்கள்
கோரமான கொடுமை...
மக்கள் வசித்துவந்த புஜ்
மயானமான கொடுமை...
அழகாய் இருந்த குஜராத்
அழிந்த ஒரு கொடுமை...
அன்பிற்க்கினிய இந்தியா
அழுத ஒரு கொடுமை...

அழத்தான் செய்தோம்...!

தம்பியை தேடும்
சகோதரிகள் இருவர்
"சஞ்சீ" என்று அழுதபோது...

மடியினில் மகனை வைத்து
மாயமாய் தன் உயிர் போனபோதும்
மகனை காப்பாற்றிய - அந்த
மகர ஜோதியை நினைத்த போது...

குடிசைகள் எல்லாம்
அழிந்த பின்னும்
கை குழந்தையோடு - அந்த
கோரத்தை பார்த்து கொண்டிருந்த
சகோதரனை பார்த்தபோது...

பத்துமாடி பணக்காரன் நேற்று
பைசா இல்லை
பிச்சைக்காரன் இன்று
பசிக்கிறது சாப்பாடு கொடு - என்ற
பெரியவரை பார்த்தபோது...

ஆறுதல் பட்டோம்...!

மனித நேயத்துக்கு ஏதடா மதம் என
மக்களுக்கு இரத்தம் தந்த - அந்த
முஸ்லீம் சகோதரர்களை நினைத்தபோது...

மதமும் இல்லை...
ஜாதியும் இல்லை...
மாற்றம் இயற்க்கை கையில்
மாறிய மக்களை பார்த்தபோது...

புதையுண்டது புஜ் ஆனாலும்
இழந்தது எங்கள் தேசம் என
இந்தியாவே அழுது
ஆதரவு தந்தபோது...

இயற்க்கை தாயே...!
அழித்தது போதும்
ஆதரவு கொடு...!!
பூமியை சிதைத்தது போதும்
புன்னகைத்து முத்தம் கொடு...!!
இனியும் வேண்டாமே...
எங்களால் முடியாது
இன்னொரு துயரத்தை தாங்க...!!

No comments: