கை வலிக்குமென்றென்னி
காதலோடு குடையை நான் கேட்க
வேண்டாமென முறைத்தாய்
வேண்டும் என்றே என்னை
வெட்க மழையில் நனைத்தாய்....
அவயங்கள் பட்டுவிடுமோ என
அதீத எச்சரிக்கையில்
அச்சத்தோடு நான் நடக்க...
நீ
நெருங்கி நடந்து வந்து
நெருப்பு சுவாசத்தால்
நெஞ்சத்தை குலைத்தாய்....
மழையின் குளிர்
மனதிற்க்குள் இருக்க
உடலின் குளிரையெல்லாம்
ஓரக்கண்ணால் விரட்டி அடித்தாய்...
மழைநீரை கையில் ஏந்தி
மாறி மாறி என்மேல் எரிந்து
தண்ணீரை கூட கை வைத்து
பண்ணீராக்கி தந்தாய்....
சல சலத்த கொலுசு சத்தம்
சட சடவென்ற மழை நீரில்
சத்தம் ஓய்ந்ததுபோல்
பட படத்த என் மனதினை
பதை பதைத்த உன் விரல் தொட்டு
யுத்தம் நிறுத்தி கடந்தாய்.....
சத்தமில்லாமல் என்மனதில்
சாகசங்கள் பல புரிந்தாய் - ஓர்நாள்
சந்தியில்நின்று ஏதுமில்லை எனசொல்லி
சாதுர்யமாய் எனை பிரிந்தாய்...
ஆனால் நான்
கொஞ்சம் நேற்று பொழிந்த
கோடை சிறு மழைக்கே
கலையாத உன்நினைவுகளில்
களிப்போடு நனைந்து வந்தேன் - இப்படி
மொத்தமாய் கொட்டிதீர்த்த மழைகளில்
மிச்சமாய் நின்றது எனது காதலும்..
உனைப்பற்றிய எனது கவிதைகளும்தான்...!
வெளிவந்த படைப்பு நன்றி :தமிழ்ஆதர்ஸ்.கொம்
காதலோடு குடையை நான் கேட்க
வேண்டாமென முறைத்தாய்
வேண்டும் என்றே என்னை
வெட்க மழையில் நனைத்தாய்....
அவயங்கள் பட்டுவிடுமோ என
அதீத எச்சரிக்கையில்
அச்சத்தோடு நான் நடக்க...
நீ
நெருங்கி நடந்து வந்து
நெருப்பு சுவாசத்தால்
நெஞ்சத்தை குலைத்தாய்....
மழையின் குளிர்
மனதிற்க்குள் இருக்க
உடலின் குளிரையெல்லாம்
ஓரக்கண்ணால் விரட்டி அடித்தாய்...
மழைநீரை கையில் ஏந்தி
மாறி மாறி என்மேல் எரிந்து
தண்ணீரை கூட கை வைத்து
பண்ணீராக்கி தந்தாய்....
சல சலத்த கொலுசு சத்தம்
சட சடவென்ற மழை நீரில்
சத்தம் ஓய்ந்ததுபோல்
பட படத்த என் மனதினை
பதை பதைத்த உன் விரல் தொட்டு
யுத்தம் நிறுத்தி கடந்தாய்.....
சத்தமில்லாமல் என்மனதில்
சாகசங்கள் பல புரிந்தாய் - ஓர்நாள்
சந்தியில்நின்று ஏதுமில்லை எனசொல்லி
சாதுர்யமாய் எனை பிரிந்தாய்...
ஆனால் நான்
கொஞ்சம் நேற்று பொழிந்த
கோடை சிறு மழைக்கே
கலையாத உன்நினைவுகளில்
களிப்போடு நனைந்து வந்தேன் - இப்படி
மொத்தமாய் கொட்டிதீர்த்த மழைகளில்
மிச்சமாய் நின்றது எனது காதலும்..
உனைப்பற்றிய எனது கவிதைகளும்தான்...!
வெளிவந்த படைப்பு நன்றி :தமிழ்ஆதர்ஸ்.கொம்