Monday, January 26, 2009

புதியதாய் ஒரு பூமி வேண்டும்...!

என் ஈழத்து சகோதரன்
எழுந்து நடக்க
ஏகதிபத்திய சுதந்திரம் வேண்டும்....!

ஆப்பிரிக்க நாடுகளில் வறுமை
அறவே இல்லையெனும்
அண்மை தகவல்கள் வேண்டும்....!

பயங்கரவாதம் தெரியாத
பண்பட்ட நேசத்தை
பங்காளி தேசங்கள் பகிற வேண்டும்...!

சாதிமத சாக்கடைகள் நீங்கி
சமத்துவ ஆறு
சங்கமித்தல் வேண்டும்...!

குண்டுகள் தொடுக்கும்
கொடூரர்கள் மறைந்து
அன்பு தொடுக்கும் நண்பர்கள் வேண்டும்....!

உலக கணினி செய்வோரையும்
உண்ண கழனி செய்வோரையும்
ஒரே சமராக பாவிக்க வேண்டும்...!

பணங்களுக்காக வாழும்
பச்சோந்தி மனிதர்கள் மாறி - நல்
மனங்களுக்காக வாழ வேண்டும்...!

பூலோகம் தழைத்தோங்க - இந்த
புயலான மாற்றங்கள் கொண்ட
புதியதாய் ஒரு பூமி வேண்டும்...!

No comments: