26/11 மும்பை தாக்குதல்
வருடங்கள் இரண்டு நகர்ந்தது
வாழ்க்கையும் நகர்கின்றது
நீங்கள் விட்டு சென்ற
தடயங்கள்...தாகங்கள்...
இன்னும்...இன்னும்...என்றும்
நகர்வதில்லை தோழர்களே....
கொடுத்தீர்கள் உயிரை எங்களுக்காக - வந்த
கொடுங்கோலன் இன்னும் இருக்கையிலே...
தடுத்தீர்கள் பாதிப்பை நாட்டுக்காக
தரமில்லா மனிதர்களின் மூர்க்கத்தினாலே...
இழப்புகளை எங்கள் பக்கம் வைத்துக்கொண்டு
எதிரிக்கு இரண்டு கோடிகளை செலவலிக்கிறோம்
புரட்சிகர மாவீரர் உங்களுக்கு
புண்ணியமாய் என்ன செய்தோம்...?
தழும்புகளை தங்கமாக ஏந்திக்கொண்டு
விளிம்புகளில் வீரமரணம் அடைந்தோரே...
நினைவுகளில்... நேசங்களில்... என்றும்...
எம்மை விட்டு எங்கும் நீங்கமாட்டீர் தோழர்களே...!
கர்கரே..காம்தே...கம்ப்ளே..சலாஸ்கர்...சந்தீப் - என
களப்பட்டியல் நீண்டு இருக்கிறது...
காவிய நாயகர்களே உங்கள் நினைவுகள்
கண்ணீராய் எங்களோடு கலந்தும் இருக்கிறது...!
உயிரின் சுவாசத்தை நாட்டிற்காய்
ஒப்புவித்து கொடுத்தோரே - உங்களுக்காய்
உண்ர்வுகள் ஒன்றுபட்டு ஒற்றுமையாய் சொல்லுகிறோம்
உளமார்ந்த வீரவணக்கம்...!!
1 comment:
Good post Ramesh. :) romba nalla irukku.
Post a Comment